day, 00 month 0000

பொன் அணிகளின் போர் யாழில் ஆரம்பம்

‘பொன் அணிகளின் போர்’ என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி – வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பெருந்துடுப்பாட்டப் போட்டி இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இன்றைய தினமும் நாளைய தினமும்  இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

1917ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பெருந்துடுப்பாட்டப் போட்டி 106ஆவது வருடமாக நடைபெறவுள்ளது.

அத்துடன், இரு அணிகளும் மோதும் ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்துக்கான 30ஆவது ஒருநாள் போட்டி மார்ச் 4ஆம் திகதியும் மூன்றாவது இருபது – 20 போட்டி மார்ச் 7ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்