day, 00 month 0000

ஹொங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் துபாயில் நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. நாணய சுழற்சியில்  வென்ற ஹொங்காங் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பாட்டம்  செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 192 ஓட்டம்  குவித்தது. சூர்யகுமார் யாதவ் 68 ஓட்ட ம் , விராட் கோலி 59 ஓட்டம்  களத்தில் இருந்தனர்.

கே.எல்.ராகுல் 36 ஓட்டம்  ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி 98 ஓட்டம்  சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது.

பாபர் ஹயாத் 41 ஓட்டம் , கிஞ்சித் ஷா 30 ஓட்டம் , செஷான் அலி 26 ஓட்டம்  எடுத்தனர். இறுதியில், ஹொங்காங் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ஓட்டம்  மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 40 ஓட்டம்  வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்