// print_r($new['title']); ?>
day, 00 month 0000

தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு

தமிழர்களின் பிரதேசத்தை பௌத்தமயமாக்கும் நோக்கத்தோடு வலிகாமம் வடக்கு தையிட்டிப் பகுதியில் தனியார் காணியில் ஸ்ரீலங்கா ஆயுதப்படையின் உதவியோடு பௌத்த விகாரையொன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் தனியாருக்கு சொந்தமான காணிகளை பாதுகாக்கும் நோக்காகவும் நாளை (3) மாலை 3 மணியளவில் குறித்த பகுதியில் கவனீர்ப்புப் போராட்டமொன்றை வலி வடக்கிலுள்ள பாதிக்கப்பட்ட தரப்பினர் ஒழுங்கமைத்துள்ளனர். 

அப் போராட்டத்திற்கு நாமும் எமது ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன் தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைத்து நிற்கின்றோம்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்