// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பழனிசாமி உருவாக்கிய பொதுக்குழு கலைப்பு; பன்னீர்செல்வம் அறிவிப்பு

அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சினைகள் எழுந்தபோது ஓ. பன்னீர்செல்வம் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், கட்சியில் சுயநலத்துடன் செயல்படுவதாகவும் ஈபிஎஸ் தரப்பில் குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில், கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி ஈபிஎஸ் தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தீர்மானிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். அதிமுகவிலிருந்து பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். அதுபோல, மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், உள்ளிட்டோரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தீவிர சட்டப்போராட்டம் நடந்தது. இதற்கிடையே மீண்டும் ஈபிஎஸ் தரப்பில் பொதுச்செயலாளர் தேர்தல் நடந்தது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்தனர். ஓபிஎஸ் தரப்பில் போடப்பட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்து வந்த உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை வாசித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும், பொதுச்செயலாளர் தேர்தலும் செல்லும் என்று உத்தரவிட்டு ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுப்படு செய்தார்.

இதனால் அதிமுக-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணியும் முடிவாகிவிட்டது. இந்த நிலையில், ஈபிஎஸ் சார்பில் கூட்டிய பொதுக்குழு கலைக்கப்படுவதாக ஓபிஎஸ் பகீர் கிளப்பியுள்ளார்.

மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வந்தது. தீர்ப்பை வாசித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, ஓ. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும், பொதுச்செயலாளர் தேர்தலும் செல்லும் என்று உத்தரவிட்டார். இதனால் அதிமுக-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கழகப் பொதுச் செயலாளர் உறுப்பினர்களால்தான் அடிப்படை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாகவும், கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அப்பதவியிலிருந்து இயற்கை நியதிக்கு புறம்பாக நீக்கியும்; கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் புரட்சித் தலைவி அம்மாதான் என்ற விதியை மாற்றியும்; அடிப்படை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளராக வர முடியும் என்கின்ற அடிப்படை விதியை மாற்றி 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும், ஐந்து ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகியாக பணியாற்றி இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்தும், இவ்வாறு, கழக சட்டதிட்ட விதிகளின் அடிப்படைக்கு நேர் விரோதமாக செயல்பட்டும் வந்த, நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய போலி பொதுக் குழு அறவே கலைக்கப்பட வேண்டும் என்றும், கழக உறுப்பினர்கள் மூலம் உண்மையான தேர்ந்தெடுக்கப் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு அமைக்கக்கப்பட வேண்டுமென்றும் 24-04-2023 அன்று திருச்சியில் நடைபெற்ற கழக அடிப்படை உறுப்பினர்களின் மாநாடு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு பரிந்துரை செய்தது.

அடிப்படை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், நியமனம் செய்யப்பட்ட போலிப் பொதுக் குழு இன்று முதல் (01-05-2023) கலைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழக உறுப்பினர்கள் யாரும் அந்த போலி பொதுக் குழு உறுப்பினர்களோடு தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன். புதிய பொதுக் குழு தேர்ந்தெடுக்கப்படும் வகையில், உண்மையான கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்பதையும், அதன்பிறகு முறையான, நேர்மையான தேர்தல்கள்மூலம் பொதுக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்