// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கொழும்பில் ஆதரவற்று இருந்த மனைவி ;யுத்தம் பிரித்த குடும்பம்- 33 ஆண்டுகளுக்குப் பின் கணவரை சந்தித்த சம்பவம்

திருகோணமலை- இலுப்பைகுளம் பகுதியிலிருந்து யுத்தம் காரணமாக 33 வருடங்கள் பிரிந்து சென்ற கணவன் - மனைவி மீண்டும் சந்தித்த சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.

1990ஆம் ஆண்டு திருகோணமலை ஏழாம் கட்டை பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது கணவன் - மனைவி என திசை மாறிச் சென்ற செல்வரட்டினம் யோகேஸ்வரி (70 வயது) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் ஆதரவற்ற நிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இந்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலைக் கொண்டு வைத்தியசாலை ஊழியர்கள் பல நாட்களாகச் சிகிச்சை அளித்துப் பராமரித்து அவரின் அடையாளத்தை வெளிப்படுத்தி பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

1953ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி பிறந்த செல்வரத்தினம் யோகேஸ்வரி (70 வயது) என்பவர் 1990ஆம் ஆண்டு 06 மாதம் ஏழாம் கட்டை பகுதியில் காணாமல் போனதாக கோபால் செல்வரத்தினம் (74 வயது) தெரிவித்துள்ளார்.

அன்று தொடக்கம் குறித்த மனைவியைத் தேடி வந்ததாகவும் மனைவி உயிரிழந்து இருக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் கடந்த 26ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து கிராம உத்தியோகத்தர் ஊடாக பொலிஸாரின் உதவியுடன் மனைவி உயிரோடு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அங்குச் சென்றபோது மனைவியின் தோற்றம் மாறி இருந்த போதிலும் நாடியில் மச்சம் இருந்ததும் தலையில் காயம் இருப்பதையும் கண்டேன். அப்போது இவர் தான் என்னுடைய மனைவி எனவும் உறுதிப்படுத்திக் கொண்டேன். அந்த நேரம் என்னுடைய மனதில் ஆழ்ந்த சந்தோசம் ஏற்பட்டது.

இருந்த போதிலும் தனது பிள்ளைகளுக்கு இவர்தானா தனது தாய் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பெண்ணினுடைய உறவினர்கள் நான்கு பேரின் பெயர்களை 33 வருடங்கள் காணாமல் போயிருந்த நிலையில், கண்டெடுக்கப்பட்ட செல்வரட்ணம் யோகேஸ்வரி என்ற பெண் தனது பிள்ளைகள் மத்தியில் கூறியதை அடுத்து தனது தாய்தான் என உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

அத்துடன் ஏழு வயதில் காணாமல் போன தனது தாய் 41 வயதான நிலையில் நோயுற்ற நிலையில் தம்மிடம் வந்து சேர்ந்தது தமக்குக் கடவுள் கொடுத்த வரம் எனவும் அவரது மகன் எமக்குத் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் தனது தாயின் முகத்தைக் காணாத நிலையில் தாயின் உறவினர்களின் உதவியுடன் தன்னை பெற்றெடுத்த தாய் இவர்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் மற்றுமொரு மகள் சந்தோசமாகத் தெரிவித்துள்ளார்.

தாங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் தாய் இல்லாத கவலை இருந்த போதிலும் 33 வருடங்களுக்குப் பின்னர் தனது தாயைக் கண்டது தனக்கு ஆழ்ந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தான் தொடர்ச்சியாகத் தனது தாயை ஆதரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டம் இலுப்பை குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசித்து வரும் இந்த குடும்பத்திற்குத் தனியாக சீவிப்பதற்கு எவ்வித வீடு மற்ற நிலையில் இருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.

குறித்த தாய் தற்போது வசித்து வரும் தனது மூத்த மகளின் நிலைமை பொருளாதார கஷ்ட நிலை மட்டுமல்லாது உளநலம் பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் அங்கு வசித்து வருவதையும் காணக்கூடியதாக இருந்துள்ளது.

கிரவல் மழைக்கு கீழே வீடுகள் கட்டப்பட்டிருந்த நிலையில் 33 வருடங்களின் பின்னர் மீட்கப்பட்ட தனது தாயைப் பார்த்துக் கொள்வதற்குப் பொருளாதார சிக்கல் மாத்திரமில்லாமல் நோயுற்ற தாயைப் பார்ப்பதற்குக் கூட வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதையும் அவதானிக்க முடிந்துள்ளது.

 ஆகவே, யுத்தம் காரணமாக 33 வருடங்கள் திசை மாறி வாழ்ந்து வந்த இந்த பெண்ணுக்கு யாராவது உதவி செய்ய முன்வருவார்களா?


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்