// print_r($new['title']); ?>
day, 00 month 0000

சம்சங்கின் அடுத்த அதிரடி!

சம்சங்கின் அடுத்த அதிரடி வெளியீடாக விரைவில் புதிய ’ட்ரை ஃபோல்டபள்’ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொழில்நுட்ப நிறுவனமான சம்சங் அதன் வரவிருக்கும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 சாதனங்களுடன் புதிய ட்ரை-ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை வெளியிடும் என்று கூறப்படுகிறது.

பல்வேறு தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த தகவல் குறித்து இணையத்தில் விவாதித்து வருகின்றனர். சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு Galaxy S23 FE ஐ அறிமுகப்படுத்தாது என்று SamMobile தெரிவித்துள்ளது.

ட்ரை-ஃபோல்டிங் கேலக்ஸி சாதனம் என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது சிறிய ஸ்மார்ட்போனிலிருந்து பெரிய திரை டேப்லெட்டாக மாறும், அதன் மடிக்கக்கூடிய OLED திரை இரண்டு கீல்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்