// print_r($new['title']); ?>
சம்சங்கின் அடுத்த அதிரடி வெளியீடாக விரைவில் புதிய ’ட்ரை ஃபோல்டபள்’ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழில்நுட்ப நிறுவனமான சம்சங் அதன் வரவிருக்கும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 சாதனங்களுடன் புதிய ட்ரை-ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை வெளியிடும் என்று கூறப்படுகிறது.
பல்வேறு தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த தகவல் குறித்து இணையத்தில் விவாதித்து வருகின்றனர். சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு Galaxy S23 FE ஐ அறிமுகப்படுத்தாது என்று SamMobile தெரிவித்துள்ளது.
ட்ரை-ஃபோல்டிங் கேலக்ஸி சாதனம் என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது சிறிய ஸ்மார்ட்போனிலிருந்து பெரிய திரை டேப்லெட்டாக மாறும், அதன் மடிக்கக்கூடிய OLED திரை இரண்டு கீல்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.