// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பாடசாலை விடுமுறை – மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை விடுமுறைகள் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கிடையில், 2022 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக மே 13 முதல் 24 வரை மீண்டும் விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சை காரணமாக இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 12 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அனைத்து சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் 23 முதல் 2024 ஜனவரி 1 வரை வழங்கப்படவுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்