// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ராமர் சிலைக்கான பாறைகள் நேபாளத்தில் இருந்து வரவைப்பு

அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், ராமரின் குழந்தை வடிவ சிலையை செதுக்குவதற்கான 2 அபூர்வ பாறைகள், நேபாளத்திலிருந்து அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

நேபாள நாட்டின் முஸ்டாங் மாவட்டம் முக்திநாத் அருகே உள்ள கண்டாகி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இந்த பாறைகள், 6 கோடி ஆண்டுகள் பழமையானவையாகும். ஒரு பாறை 26 டன் எடையும், இன்னொரு பாறை 14 டன் எடையும் கொண்டவை.

 வியாழக்கிழமை இந்த பாறைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 51 வேத விற்பன்னர்களும் வழிபட்டனர்.

நேபாளத்தில் உள்ள ஜானகி கோவில் நிர்வாகி மகந்த் தபேஸ்வர் தாஸ், அந்த பாறைகளை ராமஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் ஒப்படைத்தார்.

இந்த பாறைகளில் இருந்து செதுக்கப்படும் குழந்தை வடிவ ராமர் சிலை, கோவில் கர்ப்பகிரகத்தில் நிறுவப்படும்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மகர சங்கராந்தி நாளில் கோவிலை திறக்கும்வகையில், பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்