// print_r($new['title']); ?>
இந்தியாவின் உயரிய மருத்துவ நிறுவனங்களில் ஒன்றான எய்மஸ் (AIIMS) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆண்களிடம் ஆய்வு மேற்கொண்டது. ஆண்களின் விந்தணுகளில் SARS-CoV-2 கொரோனா தொற்று இருப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு ஒரு மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், SARS-CoV-2 கொரோனா தொற்று, விந்தணுக்களின் தரத்தில் குறைத்து, பாதிப்பை ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளது.
எய்ம்ஸ் பாட்னாவின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு, கொரோனா தொற்று ஆஞ்சியோடென்சின்-மாற்றும் என்சைம்-2 ஏற்பி (angiotensin-converting enzyme-2 receptor) மூலம் பல உடல் உறுப்புகளை சேதப்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது விதைப்பை திசுக்களில் ஏராளமாக உள்ளது. இருப்பினும், விந்தணுவில் உள்ள SARS-CoV-2 தொற்று, விந்தணு உருவாக்கம் மற்றும் கருவுறுதல் திறன் ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சிறிய தகவல்கள் கிடைக்கின்றன.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்துவில் SARS-CoV-2 இருப்பதை ஆராய்வதற்கும், விந்தணுவின் தரம் மற்றும் DNA Fragmentation Index ஆகியவற்றின் மூலம் கொரோனாவின் தாக்கத்தை ஆய்வு செய்வதற்கும் அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். DNA Fragmentation Index என்றால் விந்தணுவின் மரபணுப் பொருளான டிஎன்ஏவின் நிலைத்தன்மை மற்றும் அதன் சேதத்தை பிரதிபலிக்கும். இதன் மூலம் விந்தணு சேதத்தை துல்லியமாக கண்டறிய இயலும்.
எய்ம்ஸ் பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 19-45 வயதுடைய 30 கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட, ஆண் நோயாளிகளிடம் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் வரை கணக்கெடுப்பு ஆய்வு மேற்கொண்டோம். ஆராய்ச்சியாளர்கள் அனைத்து நோயாளிகளின் விந்து மாதிரிகளிலும் RT-PCR சோதனை மேற்கொள்ளப்பட்டது.