// print_r($new['title']); ?>
day, 00 month 0000

உக்ரேனில் 60 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இருட்டில்

உக்ரேனில் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. 

உக்ரேனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷ்ய இராணுவம் தாக்கியது. கடந்த சில நாட்களாக  உக்ரேனின் முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்க ரஷ்யா டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருகின்றது. 

உக்ரேன் மின் நிலையங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை ரஷ்யா அழித்துள்ளது. இதனால் உக்ரேனில் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாட்டில் 60 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இன்னும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்தார். 

பெரும்பாலான பகுதிகளில் (உக்ரேனின்) மற்றும் கீவ்வில் இருட்டடிப்பு தொடர்கிறது. மொத்தத்தில், 60 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்வெட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது பாதியாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்