// print_r($new['title']); ?>
day, 00 month 0000

நேரு குடும்பத்திடம் இருந்து கைமாறிய காங்கிரஸ்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான மல்லிகார்ஜுன கார்கே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் 1000 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் தன்னுடன் போட்டியிட்ட சசி தரூரை ஆயிரக்கணக்கான வாக்குகளில் அவர் தோற்கடித்த நிலையில், கடந்த 24 ஆண்டுகளாக சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி உட்பட்ட நேரு குடும்பத்தின் வசமிருந்த காங்கிரஸின் தலைமைப் பதவி தற்போது நேரு குடும்பத்தின் தீவிர விசுவாசியான மல்லிகார்ஜுன கார்கே வசம் சென்றுள்ளது.

தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பின்னர், நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆவது உறுதியாகி உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.

இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர்.

நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர்.

வாக்குப் பதிவு முடிவடைந்தது டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் குழு தலைமையகத்துக்கு வாக்கு பெட்டிகள் நேற்று கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று தேர்தலில் பதிவான வாக்குகள்  எண்ணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்