// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இந்திய நிறுவனத்தின் மருந்தை அருந்திய 66 சிறார்கள் உயிரிழப்பு! - உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்

காய்ச்சல், தடிமன் மற்றும் இருமலை குணப்படுத்துவதற்காக மருத்துவ பரிந்துரைக்கு அமைய வழங்கப்பட்ட இந்திய மருந்து நிறுவனம் ஒன்றின் பாணி மருந்தை அருந்திய கெம்பியா நாட்டை சேர்ந்த 66 சிறார்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Maiden Pharmaceuticals என்ற இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த நான்கு மருந்துகளை அருந்திய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வறிய நாடான கெம்பியாவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளே பயன்பாட்டில் உள்ளன.

Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup ஆகிய இந்திய மருந்து நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளே அங்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சிறார்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் துரிதமான விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சிறுநீரகம் செயலிழந்ததன் காரணமாகவே மருந்தை அருந்திய சிறார்கள் உயிரிழந்தனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்