cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

"டி20 உலக கோப்பையில் ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு"

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஜடேஜா இடம்பெறவில்லை. ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு என இலங்கை அணி முன்னாள் தலைவர்  ஜெயவர்த்தன கூறினார்.

இந்திய அணியின் சகல துறை வீரர்கள்  ரவீந்திர ஜடேஜா முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால்ர, டி20 உலக கோப்பை அணியில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில், டி 20 உலக கோப்பை அணியில் ஜடேஜா இல்லாதது குறித்து ஐ.சி.சி. ரிவ்யூ நிகழ்ச்சியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்  ஜெயவர்த்தன கூறியதாவது:

ஜடேஜா 5-வது இடத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவரும் பாண்டியாவும் சிறந்த சகல துறை வீரர்கள் . அவர்களால் இந்திய அணிக்கு வலுவான பேட்டிங் ஆர்டர் இருந்தது. அவர் இருந்தபோது அணியின் துடுப்பாட்டம்  வரிசை மிகச்சிறப்பாக இருந்தது. ஜடேஜா காயத்தால் விலகியபின் அணியில் இடது கை ஆட்டக்காரர் வேண்டும் என்பதாலே தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்டை அணி 4வது அல்லது 5வது வரிசையில் ஆட தேர்வு செய்தது.

உலக கோப்பையில் இந்திய அணி 4 அல்லது 5-வது வரிசையில் யாரை ஆட வைக்கலாம் என தேர்வு செய்ய வேண்டும். ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு, அவர் துடுப்பாட்டம்  மற்றும் பந்துவீச்சில் நல்ல நிலையில் இருந்தார். அவர் இல்லாதது அணிக்கு பெரிய இழப்பு என தெரிவித்தார்


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்