day, 00 month 0000

நிர்பந்தம் காரணமாக கமல் திமுகவில் சரணடைந்துள்ளார்

தமிழகத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன்,நிர்பந்தம் காரணமாக திமுகவிடம் சரணடைய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாஜகவின் தமிழ் நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரசியல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என கமல்ஹாசன் கட்சியை ஆரம்பித்தார்.எனினும் அவர் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.

கமலஹாசனுக்கு இருக்க கூடிய நிர்பந்தம், மீண்டும் திமுகவுக்கு சென்று சரணடைய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது ஏற்கனவே நடந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது நடந்துள்ளது.

கமலஹாசன் திமுகவின் நிலைப்பாட்டில் தான் செல்ல வேண்டும் என்பது எனக்கு கவலையை ஏற்படுத்துகிறது என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்