day, 00 month 0000

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம் : மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்

மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்த நிலையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இரண்டு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது. இதில், சுமார் 60 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமான பொருட்கள் தீக்கிரையாயின. துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இம்பால் அருகே உள்ள லாம்புலனஸ் நகரில் மீண்டும் கலவரக்காரர்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர்.  தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மீண்டும் கலவரக்காரர்கள் களம் இறங்கியுள்ளதால், துணை ராணுவப்படைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பதற்றத்தை தணிக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்