// print_r($new['title']); ?>
day, 00 month 0000

என்னை கொல்ல திட்டமிட்டார்கள்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை போன்று  பதவி ஆசை தனக்கில்லை என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் 6ஆம் திகதி 2021ஆம் ஆண்டு நான் ஏற்பாட்டாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். 

அப்போதிருந்து, பல்கலைக்கழகங்களில் கற்கும் சகோதர சகோதரிகளின் பிரச்சினைகள் மட்டுமல்ல, 

துன்பப்படும் மக்களின் பிரச்சினைகளும் பேசப்பட்டன. அதுமட்டுமின்றி பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.

மகிந்தவைப் போல் நாற்காலியில் இருக்க  விருப்பமில்லை.

என்னை கொல்ல திட்டமிட்டார்கள். அந்தச் சவால்களையெல்லாம் சளைக்காமல் எதிர்கொண்டேன்.

மகிந்தவைப் போல் நாற்காலியில் இருக்க எனக்கு விருப்பமில்லை. நான் மகிழ்ச்சியாக செல்கிறேன். 

ஏனென்றால் அவர்களில் பலமான தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அந்த ஒரு தலைவர் மதுஷன் என்று அழைக்கப்படுகிறார்.

நான் போனதால் போராட்டம் நிற்காது. இந்தப் பிரச்னைகள் தீரும் வரை அவை தொடரும். எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்காகவும் குரல் எழுப்புவேன் 

என் நேரம் முடிந்துவிட்டது. நான் விரக்தியிலிருந்து வெளியேறவில்லை. இப்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மதுஷன் சோயுரத் இந்த தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்புவது உறுதி. அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்