// print_r($new['title']); ?>
day, 00 month 0000

'கண்டவுடன் சுட உத்தரவு'; மாநிலம் முழுவதும் ஊரடங்கு- மணிப்பூரில் என்ன நடக்கிறது?

மணிப்பூரில் ஆல் ட்ரைபல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் (அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம்) நடத்திய பொது பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடும் உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்க ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநில காவல்துறையுடன் இணைந்து பல இடங்களில் வன்முறையை கட்டுப்படுத்தியதாகவும், கொடி அணிவகுப்புகளை நடத்தியதாகவும் ராணுவம் முன்னதாக கூறியிருந்தது.

மாநிலம் முழுவதும் புதன்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு மொபைல் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தப்பரவலான வன்முறை தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களில், பல இடங்களில் வீடுகள் தீயில் எரிவதைக் காண முடிகிறது. சுராசந்த்பூரில் ஒரு ஆயுதக் கடைக்குள் சிலர் புகுந்து துப்பாக்கிகளைக் கொள்ளையடிப்பதை ஒரு வீடியோவில் காணலாம்.

இருப்பினும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அத்தகைய படங்கள் மற்றும் வீடியோ கிளிப்புகள் எதையும் பிபிசி உறுதிப்படுத்தவில்லை. இந்த வன்முறையில் இதுவரை குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமையன்று மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங்கிடம் பேசினார். மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவர் கேட்டறிந்தார்.

இதற்கிடையில் மணிப்பூர் முதலமைச்சர் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அமைதி காக்குமாறு மாநிலத்தின் எல்லா சமூகத்தினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ட்வீட் செய்து இந்த வன்முறைச்சம்பவத்திற்கு கவலை தெரிவித்துள்ளார். "இது அரசியலுக்கான நேரம் அல்ல. அரசியலும் தேர்தலும் காத்திருக்கலாம். ஆனால் நமது அழகிய மாநிலமான மணிப்பூரைக் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தீவைப்பு தொடர்பான சில படங்களை பகிர்ந்துள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை டேக் செய்து, "மணிப்பூர் எரிகிறது, தயவுசெய்து உதவுங்கள்" என்று எழுதியுள்ளார்.

பட்டியல் பழங்குடி (எஸ்டி) பிரிவில் மெய்தேயி சமூகத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று மாநில அரசைக் கேட்டுக் கொண்டது.

மத்திய அரசின் பரிசீலனைக்கும் இதை அனுப்புமாறு நீதிமன்றம் தனது உத்தரவில் கேட்டுக் கொண்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் புதன்கிழமையன்று தலைநகர் இம்ஃபாலில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள டோர்பாங் பகுதியில் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' பேரணிக்கு ஏற்பாடு செய்தது. இந்தப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அப்போது வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது.

சுராசந்த்பூர் மாவட்டத்தைத் தவிர, சேனாபதி, உக்ருல், காங்போகபி, தமெங்லாங், சந்தேல் மற்றும் தெங்னௌபால் உள்ளிட்ட எல்லா மலை மாவட்டங்களிலும் இத்தகைய பேரணிகள் நடத்தப்பட்டன.

டார்பாங் பகுதியில் நடந்த 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' பேரணியில் ஆயிரக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர். அதன் பிறகு பழங்குடி குழுக்களுக்கும் பழங்குடியினர் அல்லாத குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்