ஐ.நாவில் மனித உரிமை ஆணையரின் அறிக்கை இன்று

2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் ஹுசைன் இந்த அமர்வில் எழுத்துமூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கு அமைவாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையை இந்த அமர்வில் இன்று வெளியிடவுள்ளார். ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையின் வரைபு கடந்த 3ஆம் திகதி வெளியாகியிருந்தது. அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் மிகக் காட்டமான கருத்துக்களை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்திருந்தார்.